Tuesday, December 22, 2009

திருப்பாவை உபன்யாசத்தில் இருந்து சில அறிய விஷயங்கள்.

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் திருப்பாவை உபன்யாசத்தில் இருந்து சில அறிய விஷயங்கள்.

தூக்கம், கனவு, ஹ்ருதயம் மற்றும் நாடி இவைகளை பற்றி தெரிய வேண்டுமென்றால் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் திருப்பாவை உபன்யாசத்தின் 5 ஆவது பகுதியை கேளுங்கள். இதே பகுதியில் நம்மை பற்றியும் நமது ஆத்மாவை பற்றியும் நமக்குள் எத்தனை கேள்விகள் எழுமோ, அத்தனையும் ஸ்ரீ கிருஷ்ணன் சுவாமிகளே கேட்டு விடை அளித்திருக்கிறார்கள். மிக உயர்ந்த விழயங்களை தெரிந்து கொள்ளலாம்.

6 ஆவது பகுதியில் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் மிக அடிப்படையான ரகஸிய த்றேயசாரத்தின் அர்த்தத்தை சுருக்கமாக விளக்கியுள்ளார்.

8 ஆவது பகுதியில் சரணாகதி தத்துவத்தின் முக்கியமான விழயங்களை பற்றி தெளிவாக கூறியுள்ளார்.

ஆத்மா நமது உடலை விட்டு எவ்வாறு பிரிகிறது, அது எந்த பாதையில் திரும்ப படைத்தவனை நோக்கி செல்கிறது-இது மிகவும் சுவையான, முற்றிலும் புதிய தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம். இதை 10 ஆவது பகுதியில் கேட்கலாம்.

அத்வைதம், விசிஷ்டாத்வைதம் இவற்றின் முக்கிய ஒற்றுமையை பற்றியும் இதே பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

இன்னும் வரும் ...
Kindly Bookmark and Share it:
Follow Me on Pinterest

No comments:

Post a Comment